Friday, October 15, 2010

முதல் முத்தம்......!!!!!



சலசலக்கும் ஓடை..
ஜில்லென்ற காற்று..
தூரத்து வானம்..
பெளர்ணமி நிலவு..
அந்தி மழை..
அந்த நேரத் தேனீர்..
காலைத்தூக்கம்..
கனவின் மயக்கம்..
விடியலின் குளிர்மை..
விண்மீனின் கண் சிமிட்டல்..
இனிமையான ரீங்காரம்..
இரவு நேர மெல்லிசை..
பரந்த புல்வெளி..
இலை மேல் பனித்துளி..
மெழுகுவர்த்தி இரவு..
தென்னங்கீற்று சங்கீதம்..
ரயிலின் ஜன்னலோரம்..
துள்ளித்திரியும் மான் குட்டி..
இவையொன்றும் ரசிக்கவில்லை- உன்
ஒற்றை முத்தத்தை போல் ....!!!!!!!