Thursday, May 5, 2011

முதல் சந்திப்பு.....!!!!!!!!!!!!



எதிர்பாராமல் நிகழ்ந்தது
அவனுடனான - என்
முதல் சந்திப்பு.....
பலநாள் தேக்கி வைத்த நேசங்களை
கொட்டித்தீர்த்திடவும்....
முதல் பார்வையிலே
முற்றும் துறந்திடவும்....
கண் சிமிட்டிச் சிரிக்கும் காதல் தருணங்களை
மீட்டிப் பார்த்திடவும்.....
அவனிரு கைகளுக்குள்ளே
காலம் மறந்திடவும்....
உச்சி முகர்ந்து முத்தமிட்டிடவும்...
மனம் விட்டழ மார்பு சாய்ந்திடவும்....
மனம் துடிக்கிறது......
காலத்தின் கறுப்புச் சுவர் எம்மிடையே எழுந்து நிற்பதை மறந்து....!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!

14 comments:

  1. நேசம் வைத்த நினைவுகள் மட்டுமே மிச்சமாகுமே..
    உணர்வுகளின் வரிகள் ஸ்ரீ!

    ReplyDelete
  2. இருள் விளக்கி ஒளி தேடு
    உனக்காக காத்திருக்கு
    பல்லாயிரம் நட்சத்திரங்களும்
    பல நூறு நிலாக்களும்
    ஓரிரு டியூப் லைட்டும் கூட!

    ReplyDelete
  3. முதல் சந்திப்பிலியே முத்தமா?

    எனக்கு கவிதை சரியாக புரிய வில்லையோ..

    வரிகள் அமைப்பு அருமை..

    ReplyDelete
  4. >>காலத்தின் கறுப்புச் சுவர் எம்மிடையே எழுந்து நிற்பதை மறந்து.

    நீட் லைன்ஸ்

    ReplyDelete
  5. @ சரவணன்..
    ///ஓரிரு டியூப் லைட்டும் கூட///

    எதை சொல்றிங்க.... நீங்க கூட நல்ல எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. @ சி.பி.செந்தில்குமார் ....
    thnk u sir....

    ReplyDelete
  7. @ தோழி பிரஷா......
    நன்றி தோழி...

    ReplyDelete
  8. @Shri
    உன் மேல சத்தியமா நான் என்னைய தான் சொன்னேன்!

    ReplyDelete
  9. @ சரவணன்......
    என் மேலயா.... என்ன கொடும சரவணா இது....

    ReplyDelete
  10. @ மனோவி ....
    ஹிஹிஹிஹி.... நன்றிங்கோ

    ReplyDelete
  11. காலம் மறந்திடவும்....//

    வரிகள் அருமை..

    ReplyDelete