Friday, July 23, 2010

நீயில்லாத என் தனிமை....!!!!!!!



நான் வாழ்ந்த
இரண்டாம் கருவறை - நீ...
தாயின் கருவறையிலிருந்து
பிரியும் போது வெட்டுப்பட்ட
தொப்புழ் கொடியின் வலியை விட
உன்னிலிருந்து நீங்கும் போதான வலி
ரணமானது.....

கனவுகளை சுமந்திருந்த - என்
கண்கள் இப்போது
கண்ணீரை சுமக்கிறது....

உன் உறவு - என்
உடைமை என்றிருந்த எனக்கு
உன் பெயர் சொல்லக்கூட
உரிமை இல்லையாம்....

எத்தனை காதலர்களை கண்டிருக்கும்
இவ்வுலகம்....
எத்தனை காதல்களை இழந்திருக்கும்
இவ்வுலகம்....
காலத்தின் சுவடுகளில் - நம்
பாதங்களும் பதிந்திருக்கும்...
அதிலாவது நிலைத்திருப்போம்
நாமும்....
நம் காதலும்.......

உன் தனிமைக்கு - நான்
துணை என்றாய்....
இப்போது - நீ
இல்லாததால் - நான்
தனிக்கிறேன்...
கொல்கிறது நீயில்லாத
என் தனிமை.......!!!!!!!!

26 comments:

  1. //உன் உறவு - என்
    உடைமை என்றிருந்த எனக்கு
    உன் பெயர் சொல்லக்கூட
    உரிமை இல்லையாம்....//

    //காலத்தின் சுவடுகளில் - நம்
    பாதங்களும் பதிந்திருக்கும்...
    அதிலாவது நிலைத்திருப்போம்
    நாமும்....
    நம் காதலும்.......//

    வலிகளைச் சொல்லும் வரிகள்..
    நல்ல கவிதை..

    நட்புடன்,
    பாலாஜி

    ReplyDelete
  2. சங்க காலத்தில் இருந்தே இதே வேலையா போச்சு (தனிமைய திட்டறது).. நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. தனிமை சொல்லும் நல்ல கவிதை..

    ReplyDelete
  4. @ balaji...
    ///வலிகளைச் சொல்லும் வரிகள்..
    நல்ல கவிதை.. ///

    ரொம்ப நன்றி.....

    ReplyDelete
  5. @ பிரசன்னா...
    ///சங்க காலத்தில் இருந்தே இதே வேலையா போச்சு (தனிமைய திட்டறது).. நல்லா இருக்கு..///

    திட்டிக்கொண்டே நல்லா இருக்குன்னு சொல்றிங்க.....
    தனிமையை விட கொடுமை எதுவுமே இல்லைங்க....
    நன்றிங்க....

    ReplyDelete
  6. @ வெறும்பய....
    ///தனிமை சொல்லும் நல்ல கவிதை..///

    நன்றி......

    ReplyDelete
  7. //கனவுகளை சுமந்திருந்த - என்
    கண்கள் இப்போது
    கண்ணீரை சுமக்கிறது..//

    வலிக்கும் நிஜம்...!

    ReplyDelete
  8. //உன் தனிமைக்கு - நான்
    துணை என்றாய்....
    இப்போது - நீ
    இல்லாததால் - நான்
    தனிக்கிறேன்...
    கொல்கிறது நீயில்லாத
    என் தனிமை.......!!!!!!!! //

    கொன்னுட்டீங்க...வாழ்த்துகள்

    ReplyDelete
  9. @ pinkyrose...
    ///வலிக்கும் நிஜம்...!////

    வலிகளின் விளைவுகள் தானே வார்த்தைகள்... நன்றிங்க....

    ReplyDelete
  10. @ கோவை குமரன்....
    /// கொன்னுட்டீங்க...வாழ்த்துகள்///

    நன்றிங்க....

    ReplyDelete
  11. தனிக்கிறேன் என்றால் தனிமையில் தவிக்கிறேன் என்பதன் சுருக்-கா?தவிக்கிறேன் என்பதன் பிழையா?
    anyway கவிதையும் லே அவுட்டும் அருமை

    ReplyDelete
  12. //கொல்கிறது நீயில்லாத
    என் தனிமை.....//

    arumai.

    ReplyDelete
  13. @ கருணாகரசு...
    /// நல்லாயிருக்குங்க///
    நன்றிங்க...

    ReplyDelete
  14. @ செந்தில்குமார்.....
    ///தனிக்கிறேன் என்றால் தனிமையில் தவிக்கிறேன் என்பதன் சுருக்-கா?தவிக்கிறேன் என்பதன் பிழையா?
    anyway கவிதையும் லே அவுட்டும் அருமை///

    தவிப்புடன் கூடிய தனிமை.....
    நன்றிங்க....

    ReplyDelete
  15. @ kaosalya & LK...
    நன்றிகள் பல......

    ReplyDelete
  16. எளிமையான அதே சமயம் அழகான கவிதை.

    I SEEN YOUR PROFILE. YOUR INTRESTS ARE SO CUTE.

    MANO

    ReplyDelete
  17. காதல விட்டு வெளியில வா தாயி.... எங்க போனாலும் இது என்ன தொரத்திகிட்டே இருக்குது.

    //கனவுகளை சுமந்திருந்த - என்
    கண்கள் இப்போது
    கண்ணீரை சுமக்கிறது....//

    ஆனாலும் மனம் லயித்துவிடுகிறது.

    ReplyDelete
  18. @ MANO....
    ///எளிமையான அதே சமயம் அழகான கவிதை.

    I SEEN YOUR PROFILE. YOUR INTRESTS ARE SO CUTE. ///

    ரொம்ப நன்றி மனோ.....

    ReplyDelete
  19. @ தருமி...
    //காதல விட்டு வெளியில வா தாயி.... எங்க போனாலும் இது என்ன தொரத்திகிட்டே இருக்குது.///

    காதல் என்பது நாய்க்குட்டி போல.. கடைசி வரைக்கும் ஆட்டிடும் வாலை....
    விடாது கறுப்பு மாதிரி... இதுவும் விடாது....

    ///ஆனாலும் மனம் லயித்துவிடுகிறது.///

    நன்றிங்கோ.....

    ReplyDelete
  20. வணக்கம் ஸ்ரீ... கவிதை என்பது கற்பனையின் மொழி(எனக்கு தெரிந்த வரையில்)
    ... நீங்கள் அதில் புலமை பெற்றுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. @ creasen.....
    ///வணக்கம் ஸ்ரீ... கவிதை என்பது கற்பனையின் மொழி(எனக்கு தெரிந்த வரையில்)
    ... நீங்கள் அதில் புலமை பெற்றுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...///

    வணக்கம் creasen...
    நன்றிகள் பல......

    ReplyDelete